உலக செய்திகள்
சார்க் அமைப்பை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மாலத்தீவு முன்முயற்சி: அதிபர் முகமது முய்ஸு அறிவிப்பு
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் கூட்டங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முடங்கிக் கிடக்கும் நிலையில், அதை மீண்டும் செயல்பட வைக்கத் தேவையான உதவிகளையும் மத்தியஸ்தத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அறிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து
புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவி நீக்கம்; காரணம் என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பு வகித்து வந்த கரீம் கான், பாலியல் அத்துமீறல் மற்றும் தீவிர ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகள் காரணமாகத் தனது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஐடி துறையினருக்கு மாபெரும் நிம்மதி! $100,000 H-1B விசா கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றம்! டிரம்ப் அரசிற்கு பலத்த பின்னடைவு
புதிய H-1B விசாக்களைப் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு $100,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தற்கொலைப்படைத் தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள டாங்க் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 23) இரவு பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியை குறிவைத்து பயங்கரமான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வரலாற்றில் முதன்முறையாக ஸ்பெயினில் தேசிய அவசரநிலை! 63,000 பேரை படகுகளில் மீட்ட பிரான்ஸ்; காரணம் என்ன?
ஐரோப்பிய கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாகப் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது.
வங்கதேச அரசியலில் அடுத்த புயல்! அதிபர் முகமது ஷஹாபுதீன் திடீர் ராஜினாமா
வங்கதேசத்தின் 22வது அதிபராகப் பொறுப்பு வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஏஐ மாடல்களை முடக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'கில் சுவிட்ச்' சட்ட மசோதா தாக்கல்; முழு விபரம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவற்றை உடனடியாக முடக்கும் உரிமையை அரசுக்கு வழங்கும் 'ஏஐ கில் சுவிட்ச்' (AI Kill Switch Act) என்ற புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100 ஆண்டுகாலக் கணிதப் புதிர்களுக்குத் தீர்வு! ஃபீல்ட்ஸ் மெடல் வென்று வரலாற்று சாதனை படைத்த இரு சீன கணிதவியலாளர்கள்
கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் விருதை முதன்முறையாக இரு சீன கணிதவியலாளர்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
லண்டன் ஆடம்பர ஓட்டலில் சவுதி இளவரசர் பிணமாக மீட்பு! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
சவுதி அரேபியாவை சேர்ந்த 29 வயதான இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத், லண்டனில் உள்ள ஒரு சொகுசு ஓட்டல் அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகீர் எச்சரிக்கை! கொரோனா மற்றும் 2008 பொருளாதார வீழ்ச்சியை கணித்த பத்திரிகையாளர் புதிய கணிப்பு
2008 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2019 ஆம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே கணித்து உலகிற்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரபல மூத்த பத்திரிகையாளர் ராபர்ட் பெஸ்டன்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை: 150 ஆண்டுகளில் புதிய வரலாற்று சாதனை
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் தம்பதியருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
'எனக்கு கவலையே இல்லை' - ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் அதிரடி
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியிருந்த அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
வெனிசுலா நிலநடுக்கம் கோரத்தாண்டவம்: பலி எண்ணிக்கை 5,069 ஆக அதிகரிப்பு
வெனிசுலா நாட்டில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,069 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் போர் தீவிரம்: ஜோர்டானில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! மொஜ்தபா கமேனி பகீர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதல் தற்பொழுது ஒரு புதிய போராக வெடித்துள்ளது.
அமெரிக்காவுடன் ஈராக் போட்ட $60 பில்லியன் மெகா ஒப்பந்தம்! வளைகுடா போருக்கு நடுவே புதிய கூட்டணி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் காரணமாக, உலகிற்கு 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகத்தை வழங்கும் ஹார்முஸ் ஜலசந்தி தற்பொழுது கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் முற்றிலும் முறிந்துபோயுள்ளது.
தனி குடியரசு நாடாக பாகிஸ்தானில் இருந்து சுதந்திரத்தை அறிவித்த பலுசிஸ்தான்! ஒரு புதிய நாடு உருவாக என்னென்ன தகுதிகள் தேவை?
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், "பலுசிஸ்தான் குடியரசு" என்ற பெயரில் தங்களை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியாகி வரும் ஒரு கடிதம் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கான நீதிமன்ற செலவையும் கட்டும் பாகிஸ்தான்! முழு விபரம்
சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு நாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துவிட்டு, இறுதியாக அந்த நாட்டின் நீதிமன்ற செலவுகளையும் சேர்த்துக் கட்ட வேண்டிய ஒரு விசித்திரமான இக்கட்டான சூழலில் தற்பொழுது பாகிஸ்தான் சிக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் படுகொலை செய்யப்பட்டால் என்ன நடக்கும்? உடனடியாக ஈரான் மீது போர் தொடுக்கப்படுமா? வான்ஸின் கையில் இருக்கும் அதிகாரம்
தன்னைத் தாக்குவதற்கோ அல்லது படுகொலை செய்வதற்கோ ஈரான் முயன்றால், அந்த நாடு இதுவரை பார்த்திராத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்திற்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்க எம்பி லின்சே கிரஹாம் திடீர் மரணம்! ரஷ்யா, ஈரான் மீது கிளம்பும் சந்தேகங்கள்! மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் மூத்த செனட்டரான லின்சே கிரஹாம் (வயது 71), சனிக்கிழமை (ஜூலை 11) மாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.
கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, 6 பேர் காயம், கொலையாளி தலைமறைவு
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சல்சா ஆன் செயின்ட் கிளேர் வீதித் திருவிழாவில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்: சைப்ரஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா மீண்டும் குண்டுமழை
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
"1,000 ஏவுகணைகள் தயார் நிலை": ஈரான் அதிபருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை படுகொலை செய்ய ஈரான் நாடு முயன்றால், அதற்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது ஒரே நேரத்தில் 1,000 ஏவுகணைகளை ஏவித் தாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்திற்கு முன்கூட்டியே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமையன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் மோதலில் இஸ்ரேலுக்கு 'நோ'! மோதல் கையை மீறிப் போவதை தவிர்க்க அமெரிக்கா திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தையும் மீறி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
டிரம்ப் - நெதன்யாகு இடையே விரைவில் சந்திப்பு? தொலைபேசி உரையாடலில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.
குவாடர் துறைமுகம் மீது BLA தற்கொலைப்படை தாக்குதல்: 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி எனத் தகவல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மிக முக்கிய பகுதியான குவாடர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடலோர காவல்படை முகாம் மீது, தனிநாடு கோரி போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) ஒரு மிகப்பெரிய தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஸ்வீடனில் ரஷ்ய தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்: வியன்னா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா கடும் கண்டனம்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ரஷ்ய தூதரக வளாகத்தைக் குறிவைத்து நள்ளிரவில் மர்ம ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
யுபிஐ, ராணுவம் மற்றும் விண்வெளித் துறையில் புதிய கூட்டணி! இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீஷெல்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் உயர்மட்ட அளவிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையை நடத்தினார்.
20வது வெளிநாட்டு நாடாளுமன்ற உரை! சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்
சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28). அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி: குவைத், பஹ்ரைன் மீது ஏவுகணை வீச்சு! அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கும் அபாயம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காலிகமாக எட்டப்பட்டிருந்த அமைதி ஒப்பந்தங்கள் யாவும் தற்பொழுது முற்றிலும் உடையும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளன.
பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது: 'கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன்' வழங்கி கௌரவிப்பு
சீஷெல்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அவரது உலகளாவிய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி அந்நாட்டின் மிக உயரிய கௌரவமான கார்டியன் ஆஃப் தி புளூ ஹொரைசன் விருது தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம்: தேசிய தாவரவியல் பூங்காவில் 194 வயது ஜோனதன் ஆமைக்கு உணவளித்தார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) மதியம் சீஷெல்ஸ் நாட்டின் தலைநகரான விக்டோரியாவிற்கு சென்றடைந்தார்.
அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை
மேற்கு ஆசியப் பகுதியில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு முக்கியத் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வெறும் 2 வாரங்களே ஆன நிலையில், அங்கு மீண்டும் மிகக் கடுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீஷெல்ஸ் பொன்விழா தேசிய தினம்! முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் மோடி; உலகின் மிக வயதான ஜோனாதன் ஆமையை பார்வையிடுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ அரசுப் பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) சீஷெல்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டு சென்றுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல்: ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சர்வதேச வர்த்தகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலின் அதிகாரப்பூர்வ வீடியோ காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா - ஐரோப்பா இடையே புதிய வர்த்தகப் போர்? டிஜிட்டல் வரிக்கு எதிராக 100% சுங்கவரி விதிக்க டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான் போன்ற ஜாம்பவான்களைக் குறிவைத்து டிஜிட்டல் சேவை வரி விதிக்கத் திட்டமிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலாவில் மீண்டும் தொடர் நிலநடுக்கம்: 920 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, மீட்புப் பணியில் தொய்வு
பேரழிவை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!
வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: ஐநா சபை மீட்புப் பணிகள் தற்காலிக நிறுத்தம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட சில நாட்களிலேயே, உலக அளவில் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியா உள்பட 35 நாடுகள் புதிய ஏஐ ஒப்பந்தத்தில் கையெழுத்து! இதன் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது பாக்ஸ் சிலிகா உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன.
வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்வு; 4,300க்கும் அதிகமானோர் காயம்
வெனிசுலா நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) 235 ஆக உயர்ந்துள்ளது.
329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா
கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளே முழு முதற்காரணம் என்று கனடா நாட்டின் உளவுத்துறை 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு
தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்! சுனாமி எச்சரிக்கை
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்த சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.
"நாங்கதான் மிடில் ஈஸ்ட்டோட கார்டியன் ஏஞ்சல்!" ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கம் வசூலிக்க டிரம்ப் மாஸ்டர் பிளான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்தக் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எந்தவித சுங்கக்கட்டணமும் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
"உங்க பிரண்ட்ஷிப் எனக்கு தேவையில்லை!" அமெரிக்க அதிபர் டிரம்பை வெளுத்து வாங்கிய இத்தாலி பிரதமர் மெலோனி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையேயான தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான மோதல் தற்போது ஒரு மிகப்பெரிய சர்வதேச ராஜதந்திர போராக வெடித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
எஃப்ஏடிஎஃப் அமைப்பின் துணைத் தலைவராக முதல்முறையாக இந்தியர் ஒருவர் தேர்வு; யார் இந்த விவேக் அகர்வால்?
சர்வதேச அளவில் பணமோசடி, பயங்கரவாத நிதி உதவி மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் முதன்மை அமைப்பான எஃப்ஏடிஎஃப் (Financial Action Task Force) அமைப்பில் இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா இடையே திடீர் போர்நிறுத்தம்; ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மிகக் கடுமையான போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு இடையே லெபனானில் திடீர் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.
மீண்டும் மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி?அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்ட 48 மணி நேரத்தில் ஈரான் போட்ட திடீர் முட்டுக்கட்டை! பின்னணி என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே, அங்கு மீண்டும் புதிய சிக்கல் வெடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த புதிய புத்தகம் 'ரெஜிம் சேஞ்ச்': மாவோ, ஸ்டாலினுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட அதிர்ச்சி தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த பல்வேறு அதிரடித் தகவல்கள் புதிய புத்தகம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தாக்குதல்! 200 ட்ரோன்கள் மூலம் மாஸ்கோவை உலுக்கிய வான்வழித் தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்குப் பின்னடைவு! 2026 உலக அமைதிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின் தள்ளப்பட்ட வல்லரசு நாடு! முதலிடத்தில் ஐஸ்லாந்து
உலக அளவில் நிலவி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போர்கள், குற்றச்சாட்டுகளின் விகிதம், அரசியல் வன்முறைகள் மற்றும் ராணுவமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளின் பாதுகாப்பை மதிப்பிடும் உலக அமைதி குறியீடு 2026 (Global Peace Index - GPI) அறிக்கை ஜூன் 2026 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 11 பேர் பலி, வரலாற்றுச் சிறப்புமிக்க கீவ் கதீட்ரல் தீப்பற்றி எரிந்தது!
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் தீவிர ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
33 ஆண்டுகளில் ஸ்லோவாக்கியா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி! ரொட்டி-உப்பு கொடுத்து வரவேற்றதன் பின்னணி
தனது மூன்று நாடுகள் அடங்கிய ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா நாட்டின் தலைநகரான பிராட்டிஸ்லாவா நகருக்கு சென்றடைந்துள்ளார்.
இன்று கையெழுத்தாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் பிடிவாதம்; ஈரான் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் உக்கிரமான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் அமைதி ஒப்பந்தத்தில் தற்பொழுது கடுமையான காலக்கெடு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
அமெரிக்க - இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்! 4 மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்ட அலி கமேனியின் இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்: அமெரிக்காவின் திடீர் பச்சைக்கொடியும் புதிய நிபந்தனைகளும்! விரைவில் கையெழுத்தாகும் வரலாற்று ஒப்பந்தம்
ஈரான் நாட்டுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், டிரம்ப் நிர்வாகம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு மிக முக்கியமான அதிரடி விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பீதி! காடுகளுக்கு நடுவே மர்மமாக ஒளிரும் விந்தையான கோளங்கள்; எஃப்பிஐ ரகசியக் கோப்புகள் வெளியீடு
அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் இரவு நேர வானில் விசித்திரமான முறையில் ஒளிரும் மர்ம கோளங்கள் தொடர்ந்து தோன்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர்.
போர்ப் பதற்றம் தணியுமா? அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடுமையான ராணுவப் பதற்றத்தைத் தணித்து, தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! ஓயாத மோதல்களின் பின்னணி என்ன?
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
செலன்ஸ்கியின் நேருக்கு நேர் சந்திப்பு கோரிக்கையை நிராகரித்த புடின்! உக்ரைன் போரில் நீடிக்கும் மோதல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாகத் தொடர்ந்து போர் நீடித்து வரும் சூழலில், இரு நாட்டு அதிபர்களின் நேருக்கு நேர் சந்திப்பிற்கான வாய்ப்பு தற்பொழுது முடங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை! உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது புதிய போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்! சுயபாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிவிப்பு!
சர்வதேச வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் MQ-1 ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் விசித்திர எல்லை சர்ச்சை கருத்து! நாடாளுமன்றத்தில் அவர் பேசிய உண்மை என்ன?
நேபாளத்தின் புதிய மற்றும் மிக இளம் பிரதமரான பாலேந்திர ஷா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் நேபாளமும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
ஜபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்! ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன்
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் $10 பில்லியன் ஐஆர்எஸ் வழக்கு ஒப்பந்தம் ரத்து? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அரசாங்கத்தின் உள்நாட்டு வருவாய் துறைக்கு (ஐஆர்எஸ்) எதிராகத் தொடர்ந்த 10 பில்லியன் டாலர் வழக்கின் சமரச ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்கப் போவதாகப் புளோரிடா நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்! பின்னணியில் இருக்கும் அரிய ஏவுகணை ரகசியம்
கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான 4.5 தலைமுறை எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம், ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
டிரம்ப்பின் போர்நிறுத்தக் கூற்றை நிராகரித்த ஈரான்! அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் எனத் தெஹ்ரான் அதிரடிப் பதில்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகை நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷ்ய ராணுவம் சேர்ப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணியும் கடுமையான எதிர்ப்பும்!
உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
காசாவில் 70% பகுதியை ஆக்கிரமிக்க நெதன்யாகு அதிரடி உத்தரவு: ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
காசா முனையில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் ராணுவக் கட்டுப்பாட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.